புதிய தலைமுறை, வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் மற்றும் ஜெயேந்திர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் 50 பள்ளிகளைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் *டாக்டர் சி. பழனி* கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.உடன் பள்ளியின் தாளாளர் J.பிரகாஷ் அவர்கள்,செயலாளர் P.K. ஜனார்த்தனன் அவர்கள் பள்ளிக் குழும உறுப்பினர்கள், பள்ளியின் முதல்வர்கள் திருமதி B.சுமதி திருமதி S. மகாலட்சுமி துணை முதல்வர் திருமதி U.கௌதமி மற்றும் விளையாட்டு துறை தலைவர் T.தமிழ்மணி உடன் இருந்தனர்.